Skip to main content
Date
2-வது பெரிய கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ரூ.148 கோடி கிடைத்துள்ளது. அதற்கு முந்தைய ஆண்டு ரூ.26 கோடி மட்டுமே அந்த கட்சிக்கு கிடைத்திருந்தது.

திரிணாமுல் காங்கிரஸ் ரூ.44 கோடியும், தேசியவாத காங்கிரஸ் ரூ.12 கோடியும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ரூ.3 கோடியும், இந்திய கம்யூனிஸ்டு ரூ.1 கோடியே 59 லட்சமும் இந்த வகையில் நன்கொடை பெற்றுள்ளன.

பெரும்பாலும் நாட்டின் வர்த்தக தலைநகராக இருக்கும் மும்பை மற்றும் மராட்டிய மாநிலத்தில் இருந்தே அதிக நன்கொடை வந்துள்ளது.

இதன்படி ஒட்டுமொத்த தொகையில் ரூ.548 கோடி மராட்டிய மாநிலத்தில் இருந்தும், ரூ.141 கோடி டெல்லியில் இருந்தும், ரூ.55 கோடி குஜராத்தில் இருந்தும் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வந்துள்ளன.

ஒட்டுமொத்த தொகையில் ரூ.876 கோடி கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களிடம் இருந்து வந்துள்ளன. மீதி ரூ.71 கோடி நன்கொடை 3509 தனிப்பட்ட நபர்கள் மூலம் கிடைத்துள்ளது.

கார்ப்பரேட் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மூலம் பாரதிய ஜனதாவுக்கு கிடைத்த தொகை ரூ.698 கோடி ஆகும். காங்கிரசுக்கு இந்த வகையில் ரூ.122 கோடி வந்துள்ளது.

டாடா நிறுவனத்தை சேர்ந்த தேர்தல் அறக்கட்டளை தான் அதிக அளவில் நன்கொடைகளை வழங்கி இருக்கிறது. அந்த நிறுவனம் மட்டுமே ரூ.455 கோடி வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.