Skip to main content
Source
Seithipunal
Author
சத்யா கோவிந்தசாமி
Date

இந்திய அரசியல்வாதிகள் தொடர்பான பல்வேறு புள்ளிவிவரங்களை வெளியிட்டு வரும் ஜனநாயக சீர்திருத்த சங்கம் (Association for Democratic Reforms -ADR), இம்முறை மாநிலங்களின் முதல்-மந்திரிகள் எவ்வளவு சொத்து மதிப்புகளை வைத்துள்ளனர் என்ற தகவலை வெளிப்படுத்தியுள்ளது. அந்த பட்டியலில், ஆந்திரப் பிரதேச முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, மீண்டும் இந்தியாவின் செல்வந்த முதலமைச்சர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

சந்திரபாபு நாயுடுவின் சொத்து மதிப்பு

ADR வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின் படி,சந்திரபாபு நாயுடுவின் குடும்ப சொத்து மதிப்பு ரூ.931 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.இவரது செல்வத்திற்கு அடிப்படை காரணம் அவர் அரசியலுக்கு வரும் முன்பே தொடங்கிய பால் உற்பத்தி நிறுவனம் ஆகும்.

1992 ஆம் ஆண்டு, வெறும் ரூ.1 கோடி அங்கீகரிக்கப்பட்ட மூலதனத்துடன் மற்றும் ரூ.7,000 செலுத்தப்பட்ட மூலதனத்துடன் தொடங்கப்பட்ட அந்த நிறுவனம், தற்போது பெரும் நிறுவனமாக வளர்ந்து பல கிளைகளை இந்தியாவின் பல இடங்களில் பரப்பியுள்ளது.

குடும்ப பங்கு மற்றும் வளர்ச்சி

அந்த நிறுவனத்தின் வளர்ச்சி கடந்த மூன்று தசாப்தங்களில் பெரும் உச்சத்தை எட்டியுள்ளது.

இதில் நாரா குடும்பத்தினர் 41.3% பங்குகளை வைத்துள்ளனர்.இதில் தனிப்பட்ட முறையில் சந்திரபாபு நாயுடுவின் பெயரில் சொத்து எதுவும் இல்லை என்றாலும், அவரது மனைவி புவனேஸ்வரி 24.37% பங்குகளை வைத்திருப்பதால், அந்த பங்குகள் நாயுடுவின் குடும்ப சொத்தாகவே கருதப்பட்டுள்ளது.

1995 ஆம் ஆண்டில் இந்த பங்குகளின் மதிப்பு வெறும் ரூ.25 கோடி மட்டுமே இருந்தது.தற்போது, அந்த மதிப்பு ரூ.4,381 கோடியாக உயர்ந்துள்ளது. 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அந்த நிறுவனத்தின் சந்தை மூலதனம் ரூ.6,755 கோடியை எட்டியது, மேலும் 1.8 லட்சத்திற்கும் அதிகமான பங்குதாரர்களைக் கொண்டுள்ளது.

மற்ற மாநில முதல்வர்கள்

இந்தியாவில் பல மாநில முதல்வர்கள் நல்ல பொருளாதார நிலையைப் பெற்றிருந்தாலும், ADR வெளியிட்டுள்ள இந்தப் பட்டியலில், சந்திரபாபு நாயுடுவின் சொத்து மதிப்பு அனைவரையும் விட அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

மறுபுறம், பட்டியலில் கடைசி இடத்தைப் பெற்றவர் மேற்குவங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி.
அவர்தான் இந்தப் பட்டியலில் மிகச் சுருக்கமான வசதியுள்ள முதலமைச்சராகக் குறிப்பிடப்பட்டுள்ளார்.

புள்ளிவிவரங்களின் ஆதாரம்

இந்த புள்ளிவிவரங்கள் அனைத்தும், தேர்தல் காலத்தில் முதலமைச்சர்கள் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரங்களில் உள்ள சொத்து விவரங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டதாக ADR விளக்கியுள்ளது.

மொத்தத்தில், தொழில், முதலீடு, குடும்ப பங்கு ஆகியவற்றின் மூலம் சந்திரபாபு நாயுடு இந்தியாவின் பணக்கார முதல்-மந்திரிகள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அதே நேரத்தில், எளிமையான வாழ்க்கை நடத்தும் மம்தா பானர்ஜி, மிகக் குறைந்த வசதி கொண்ட முதலமைச்சராக பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.


abc